விமான தபால் சேவையில் கடத்தப்பட்ட வெளிநாட்டு சிகரட்டுகள் பறிமுதல்!

துபாயிலிருந்து விமான தபால் சேவை மூலம் கட்டுநாயக்க விமான நிலையத்தின் களஞ்சியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்ட பொதிகளில் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் 03 கோடி ரூபா பெறுமதியான வெளிநாட்டு சிகரட்டுகள் சுங்க அதிகாரிகளால் நேற்று திங்கட்கிழமை (11) கைப்பற்றப்பட்டுள்ளன. 

இந்த பொதிகள் கடந்த ஜூலை மாதம் 13 ஆம் திகதி அன்று கொழும்பு, மட்டக்குளி பிரதேசத்தில் உள்ள முகவரி ஒன்றிற்கு விமான தபால் சேவை மூலம் கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டிருந்தது. 

விமான தபால் சேவையில் கடத்தப்பட்ட வெளிநாட்டு சிகரட்டுகள் பறிமுதல்!

இந்நிலையில், இந்த பொதிகளை கொண்டு செல்ல உரிமையாளர்கள் எவரும் வராததால் சுங்க அதிகாரிகள் இந்த பொதிகளை நேற்றைய தினம் இரவு சோதனையிட்டுள்ளனர். 

இதன்போது இந்த பொதிகளிலிருந்து ஒரு இலட்சத்து 60 ஆயிரம் வெளிநாட்டு சிகரட்டுகள் கைப்பற்றப்பட்டுள்ளன.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை சுங்க அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர்.

  • Related Posts

    தேங்காய் பிரச்சினைக்கு விரைவில் தீர்வு!

    தேங்காய் பிரச்சினைக்கு விரைவில் தீர்வு வழங்கப்படுமென பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு அமைச்சர் சமந்த வித்யாரத்ன தெரிவித்துள்ளார். நாடாளுமன்றில் நேற்று(21.01.2025) உரையாற்றுகையில் அவர் இதனை தெரிவித்துள்ளார். அவர் மேலும் கூறுகையில்,”வட மாகாணத்தில் 40,000 ஹெக்டயர் தென்னை மரங்களை நடுவதற்கு அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.…

    அரச பேருந்துகள் மீது கல்வீச்சு தாக்குதல் !

    வாழைச்சேனை சுங்கான்கேணி பிரதேசத்தில் இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான இரு பேருந்துகள் மீது கல்வீச்சு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. குறித்த சம்பவம் வாழைச்சேனை சுங்கான்கேணி 18 ஆவது மையில் பிரதேசத்தில் நேற்று இரவு இடம்பெற்றுள்ளது. யாழ்ப்பாணத்தில் இருந்து கல்முனைக்கும் மற்றும் வாழைச்சேனையில் இருந்து…