August 27, 2025

battifirst.com

Voice of Singingfish

ஜனாதிபதியின் உருவப்படம் பொறிக்கப்பட்ட 5000 ரூபா நாணயத்தாள்

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின்(Anura Kumara Dissanayaka) உருவப்படம் பொறிக்கப்பட்ட 5000 ரூபாய் நாணயத்தாள் அச்சிடப்பட்டு வெளியிடப்பட்டுள்ளதாக சமூக ஊடகங்களில் தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

எனினும் இவ்வாறு ஓர் நாணயத்தாள் அச்சிடப்பட்டு வெளியிடப்படவில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது. சமூக ஊடகங்களில் இவ்வாறான போலி தகவல் பரப்பப்பட்டு வருவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

அரசாங்கம் பெருந்தொகை பணத்தை அச்சிட்டு வெளியிட்டுள்ளதாக சில தரப்பினர் குற்றச்சாட்டுகளை சுமத்தி வரும் பின்னணியில் இந்த 5000 ரூபாய் நாணயத்தாள்  தொடர்பான தகவல் வெளியிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

5000 ரூபா நாணயத்தாள்

ஜனாதிபதியின் உருவப்படமும் அவரது கையொப்பமும் இடப்பட்ட புதிய நாணயத்தாள் வெளியிடப்பட்டுள்ளதாக சில சமூக ஊடகங்களில் தகவல் பகிரப்பட்டு வருகின்றது.

சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வரும் இந்த நாணயத்தாளானது போலியானது எனவும் இது எடிட் செய்யப்பட்டது எனவும் தெரிவிக்கப்படுகிறது.

கடந்த 2015 ஆம் ஆண்டு அச்சிட்டு வெளியிடப்பட்ட நாணயத்தாள் ஒன்று இவ்வாறு வெளியிடப்பட்டுள்ளதாகவும் அந்த காலத்தில் நாட்டின் நிதி அமைச்சராக ரவி கருணாநாயக்க(Ravi Karunanayaka) செயற்பட்டதுடன் மத்திய வங்கியின் ஆளுநராக அர்ஜுன் மகேந்திரன்(Arjun Mahendran) கடமையாற்றி இருந்தார்.

சமூக ஊடகங்களில் பகிரப்பட்டுள்ள இந்த நாணயத்தாள் அச்சிடப்பட்ட திகதியாக கடந்த செப்டம்பர் மாதம் 21ஆம் திகதி குறிப்பிடப்பட்டுள்ளது.

எனினும் கடந்த செப்டம்பர் மாதம் 23ம் திகதியே ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க பதவி பிரமாணம் செய்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவின் கையொப்பத்தில் இதுவரையில் நாணயத்தாள்கள் அச்சிடப்பட்டு வெளியிடப்படவில்லை என அமைச்சர் விஜித ஹேரத்(Vijitha Herath) தெரிவித்துள்ளார்.