August 27, 2025

battifirst.com

Voice of Singingfish

அடுத்த வருடத்தில் இருந்து பரீட்சைகள் வழமை போன்று நடைபெறும் – ஹரிணி அமரசூரிய !

இலங்கை பரீட்சைகள் திணைக்களத்தின் ஊடாக நடாத்தப்படும் பரீட்சைகளுக்கான திட்டமிடல் அனைத்தும், அடுத்த வருடத்தில் இருந்து முன்பு போல வழமையான முறையில் நடத்த முடியும் என பிரதமர், ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றில் நேற்று கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனை கூறியுள்ளார்.

அதன்படி 2026 ஆம் ஆண்டில் இருந்து, முன்பு இடம்பெற்றது போன்று சாதாரண முறைப்படி பரீட்சைகளை நடாத்த முடியும் என அவர் கூறியுள்ளார்.

மேலும், கோவிட் தொற்று ஆரம்பிப்பதற்கு முன்னர் இடம்பெற்றவாறு பரீட்சைகள் உரிய கால அட்டவணையில் நடத்தப்பட முடியும் என்றும் பிரதமர் தெளிவுபடுத்தினார்