பட்டிருப்பு வலயக் கல்வி அலுவலக முறைசாராக் கல்விப் பிரிவினரால் இடைவிலகல் மாணவர்களை குறைக்கும் செயற்பாடுகள் முன்னெடுப்பு

பட்டிருப்பு வலயக் கல்விப் பணிப்பாளர் சிவானந்தம் சிறிதரன்  வழிகாட்டலின் கீழ் றீற்றா கலைச்செல்வன் முறைசாராக கல்வி இணைப்பாளரின் ஒழுங்கமைப்பில்  மட்/பட்/காக்காச்சிவட்டை விஸ்ணு மகா வித்தியாலயத்தில் பெற்றோர்களுக்கான கட்டாயக் கல்வி தொடர்பான விழப்புணர்வுச் செயற்பாடு நடைபெற்றது.

பட்டிருப்பு வலயக் கல்வி அலுவலக முறைசாராக் கல்விப் பிரிவினரால் இடைவிலகல் மாணவர்களை குறைக்கும் செயற்பாடுகள் முன்னெடுப்பு

இவ் விழிப்புணர்வுச் செயலமர்வில் கட்டாயக் கல்வியின் முக்கியத்தவம், சிறுவர் உரிமைகள், சிறுவர் பாதுகாப்பு, துஸ்பிரயோகம், போசணை, சுகாதாரம், ஒழுக்கவிழுமியங்கள், இளவயதுத் திருமணத்தின் தாக்கம், சிறுவர்களை தொழிலுக்கு அமர்த்ததல், குடும்ப வன்முறைகள், மாணவரகளின் கல்வி, பெற்றோருக்கான சுயதொழில் வழிகாட்டல், மாணவர்களை சுய கற்றலுக்கு ஊக்கப்படுத்தல், வீட்டுச் சூழல், பாடசாலை வரவில் கவனமெடுத்தல், தந்தை தாய் வெளிநாடு செல்லல், குடும்ப உறுப்பினர்களின் மதுப் பாவனை போன்ற விடயங்கள் கருப்பொருளாகக் கொள்ளப்பட்டன. இது சம்பந்தமான துண்டுப் பிரசுரங்களும் பெற்றோருக்கு வழங்கி வைக்கப்பட்டது.

மேலும் மெல்லக் கற்கும் மாணவர்களுக்கான பரிகாரக் கற்பித்தல் செயற்பாடும் முன்னெடுக்கப்பட்டது. இச் செயற்பாட்டில் ஈடுபடுவதற்காக பட்டிருப்பு வலயத்தின் 54 பாடசாலையில் கடமையாற்றும் 54 அபிவிருத்தி உத்தியோகஸ்த்தர்கள் தெரிவு செய்யப்பட்டிருந்தனர். இவர்களுக்கான ஆரம்ப கட்டப் பயிற்சி பட்டிருப்பு வலய ஆசிரியர் வாண்மை விருத்தி நிலையத்தில் நடைபெற்றது.

  • Related Posts

    மட்டக்களப்பில் குரங்குகளின் தொல்லை அதிகரிப்பு !

    மட்டக்களப்பு மாவட்டத்தில் நகர் புறங்களிலும் குரங்குகளின் தொல்லை அதிகரித்துள்ளதாக அப்பகுதி மக்கள் கவலை தெரிவிக்கின்றனர். மட்டக்களப்பு மாவட்டத்தில் களுதாவளை, களுவாஞ்சிகுடி, தேற்றாத்தீவு, மாங்காடு, செட்டிபாளையம். குருக்கள்மடம், மற்றும் வெல்லாவெளிப் பகுதிகள் உள்ளிட்ட பல பகுதிகளிலும் இவ்வாறு குரங்குகள் கிராமங்களுக்குள் உட்பகுந்து பயன்தரும்…

    மட்டக்களப்பு மாவட்டத்தில் எமது ஆட்சியில் எந்தவொரு அரசியல் தலையீடும் இருக்காது !

    மட்டக்களப்பு மாவட்டத்தில் எமது ஆட்சியில் எந்தவொரு அரசியல் தலையீடும் இருக்காது. அதனையும் மீறி அரசியல் ரீதியாக எமது பெயரை கூறிக்கொண்டு யாரும் வந்தால் உடனே எமக்கு அறியத்தாருங்கள் என மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக் குழுத் தலைவர் அருண் ஹேமசந்திரன் அரச அதிகாரிகளிடம்…